2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு இரு விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வடமாகாண பிரதம செயலாளர் திரு. எஸ்.எம்.சமன் வந்துலசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழா, கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி நிலைய கூட்ட மண்டபத்தில் 2022.10.27 ஆம் திகதி இடம்பெற்றது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணங்களிலுள்ள அரச நிறுவனங்களில் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறனில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்திற்கு திறமைச் சான்றிதழும், அதன் கீழுள்ள மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு தள ஆயுள்வேத சித்த வைத்தியசாலைக்கு விசேட திறமைச் சான்றிதழுடன் விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்விருதுகளை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களும், புதுக்குடியிருப்பு தள ஆயுள்வேத சித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் (திருமதி) ஜே.பாஸ்க்கரன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு இரு விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.