அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு 15.02.2019 காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி M.L.A.M.ஹிஸ்புல்லா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது
இம் மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டு , கௌரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் பெறப்பட்டு இரண்டு வார காலத்துக்குள் பிரச்சினைகள் காணப்படுகின்ற பிரதேச செயலாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதேச செயலக மட்டத்தில் கலந்துரையாடி முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றும் இதைத் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்குள் மாவட்ட செயலகம் இது தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதி நியமித்துள்ள தேசிய மட்ட குழுவிற்கு சமர்ப்பிக்க பட வேண்டும் கலந்துரையாடப்பட்டது
மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கௌரவ ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்
சுகாதார சுதேச மருத்துவ நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் தினைகளத்திற்கான பயிற்றப்பட்ட ஆசிரியர், உதவி இல்ல காப்பாளர்,உதவி விடுதி மேற்பார்வையாளர், இல்லத்தாய் தொழிற்பயிற்சி போதனாசிரியர் ஆகிய பதவிகளுக்கான 15 நியமனங்கள் கெளரவ கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் இன்று (13.02.2019) ஆளுநர் செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நியமனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கிழக்கு ஆளுநரின் செயலாளர் அஸங்க அபேவர்தன, சுகாதார மாகாண அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம் அன்சார் சிறுவர் பராமரிப்பு சேவை திணக்களத்தின் உதவி ஆனையாளர் திருமதி ச. சுதர்ஷன் , சுகாதார அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீவான்கி ,ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ரயீஸ் டீன் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
US Pacific Command நிறுவனத்தின் சுமார் ஏழு கோடி ரூபா நிதி உதவியின் கீழ் நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 03 மாடி கட்டிடம் 12-03-2019 அன்று ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இதில் நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.நிசாமுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.எம்.பைசால் காசிம், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்_ஹிஸ்புல்லாஹ் , நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.லத்தீப், அமெரிக்க மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் சிவில் இராணுவ பணிப்பாளர் டெர்ரி.ஏ.ஜோன்சன் , அமெரிக்க மற்றும் மாலைதீவுக்கான தூதரக
மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பிற்கும் ஆளுநர் கலாநிதி எம.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்கிடையிலான சந்திப்பு 02.02.2019 காலை மட்டக்களப்பு ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக பாடசாலை பிரச்சனை, காணிப்பிரச்சினை ,வைத்தியசாலை பிரச்சனை, கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனை தொடர்பாக பேசப்பட்டது.
இது தொடர்பாக ஆளுநர் இப்பிரச்னைக்கான தீர்வு திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாகும் அதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகும் குறிப்பிட்டார்.
துாரநோக்கு
மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சியுடனான நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் சுபீட்சமான மாகாணம்.
பணிக்கூற்று
சீரான வள முகாமைத்துவம் மற்றும் நல்லாட்சி ஊடாக வறுமையை ஒழித்து சமூக பொருளாதார அபிவிருத்தியை உறுதிப்படுத்தல் மற்றும் நிலையான சமாதானத்துடனான சுபீட்சத்தை மேலோங்கச் செய்வதற்காக அபிவிருத்தியின் நன்மைகளை நியாயமான முறையிலும் அனைவரும் பங்குபற்றும் விதமாகவும் பகிர்வதன் ஊடாக சுபீட்சமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை நிலைமாற்றுதல்.
|
|
Title | Details |
RTI Format | |
RTI Report - 2022 | |
RTI Report - 2021 | |
RTI Report - 2020 | |
RTI Report - 2019 | |
Designated Officer & Information Officers | |
RTI Application Forms | |
Progress Summary | |
Performance Report Format | |
www.rti.gov.lk |
|
|
ஜனாதிபதி செயலகம் |
|
01. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் | |
02. ஜனாதிபதி செயலகம், இலங்கை | |
03. ஜனாதிபதி ஊடக பிரிவு | |
இலங்கை அரசாங்கம் |
மாவட்ட செயலகங்கள் |
01. அமைச்சரவை அலுவலகம் | |
02. நிதி ஆணைக்குழு |
02. மட்டக்களப்பு மாவட்ட செயலகம் |
03. நிதி அமைச்சு | 03. திருகோணமலை மாவட்ட செயலகம் |
04. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு | |
05. பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு | |
06. அரச அமைப்புகள் |