வெளிநாட்டு நிதியுதவியுடன் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் மாகாண அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
அந்தப் பணத்தின் மூலம் நாட்டில் பல தேவையற்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு அவை உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் இதன் மூலம் நடந்துள்ள ஒரே பலன் கட்டுமான ஒப்பந்ததாரர்களை வளப்படுத்துவது மட்டுமே என கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
உலக வங்கியின் உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகள் கலந்துகொண்ட விசேட கூட்டம் 2022 ஒக்டோபர் 26ஆம் திகதி திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
மேலும் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் கூறியதாவது
“உலக வங்கி உதவியின் கீழ் பெறப்பட்ட பணத்தில் வாழ்வாதார திட்டங்களுக்குச் செல்லுங்கள். கட்டுமானத்திற்கு பின் செல்ல வேண்டாம். எங்கிருந்தோ பணம் வரும்போது கட்டிடம் கட்டவோ, சாலை அமைக்கவோ, கான்கிரீட் சாலைக்கு தார் போடவோ பழகிவிட்டோம். இதுவரை அப்படித்தான் செய்து வந்தோம். இவற்றின் விளைவுகளை நாம் இப்போது பெற்றுள்ளோம். எனவே இனிமேல் அதை செய்யாதீர்கள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் பல உள்ளன. இதுபோன்ற திட்டங்களுக்கு விரைவில் செல்லுங்கள், என, அங்கிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களிடம் ஆளுநர் கூறினார்.