நேற்றைய தினம் (13.09.2020) செயலாளர், சுற்றுலா மற்றும் விமான அமைச்சகம், மற்றும் கிழக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு சுற்றுலாத்தளங்களை பார்வையிட்டு கிழக்கு மாகாண சுற்றுலா துறைக்கு வலுசேர்க்க திருகோணமலையில் சுற்றுலா தகவல் மையம் மற்றும் வர்த்தக , ஆறுதல் மையம் அமைக்க தேவையான உதவிகளை வழங்குவதாக அவர் இணங்கியுள்ளார்.
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் முன்னோடி நடவடிக்கையாக Visit East Sri Lanka” என்ற நாமத்துடன் டிஜிடல் சந்தைப்படுத்தல் சுற்றுலாத்துறை பிரசார நடவடிக்கையின் அங்குரார்ப்பன வைபவம் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு கடந்த 23.01.2020 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினால் வடிவமைக்கபட்ட சுற்றுலாத்துறை வழிகாட்டித் தகவல்கள் அடங்கிய இணையத் தளமும், கிழக்கின் சுற்றுலாத் தளங்கள் சம்பந்தமான காணொளிகள் அடங்கிய இறுவட்டு மற்றும் சுற்றுலாத்துறை வழிகாட்டிக் கைநூல் ஒன்றும் ஆளுநர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.